News January 13, 2025

ரூ.10 ஆயிரமாக உயரும் PM-கிசான் உதவித்தொகை?

image

வரும் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், PM-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இது இனி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 18 தவணைகள் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நல்ல செய்தி வருமா?

Similar News

News December 9, 2025

‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

image

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

News December 9, 2025

நாளை முதல் அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா!

image

தமிழகத்தில் நாளை(டிச.10) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST

News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

error: Content is protected !!