News July 12, 2024
967 இடங்களில் மண் எடுக்க அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் எடுக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 84 ஏரி, குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 883 ஏரி, குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மண் எடுக்க விரும்புவோர் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
அரியலூர்: காவனூர் காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் இன்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மலர் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
News July 8, 2025
அரியலூர்: தோஷங்களை நீக்கும் சனீஸ்வர பகவான்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள அம்பலவர்கட்டளை கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்ததாக நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. SHARE NOW
News July 8, 2025
அரியலூர்: வேண்டியதை தரும் தையல்நாயகி கோவில்

அரியலூர், பொய்யாத நல்லூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தையல்நாயகி திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிஅமாவாசை, ஆடிவெள்ளி இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.