News October 16, 2024

9 கடைகள் மீது அபராதம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

இறந்த மாட்டை கிணற்றுக்குள் வீசி சென்ற உரிமையாளர்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரத்தில் மானாமதுரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பயன்படாத சமுதாய கிணற்றுக்குள் உரிமையாளர் பெயர் தெரியாத சுமார் ஐந்து வயது மதிப்புள்ள பசுமாடு ஒன்று கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் போடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு மக்கள் வேதனை தெரிவித்தனர்.

News July 9, 2025

அஜித் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் கண்டிப்பு

image

திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொது வெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும், மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கண்டித்துள்ளது.

News July 9, 2025

சிவகங்கை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!