News April 12, 2024
660 கிலோ கடத்தியவர் கைது

ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ரேஷன் அரிசி கடத்திய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 15, 2025
ஈரோட்டில் வெடிக்க வைக்க முயன்ற 4 பேர் கைது!

ஏளுர் பகுதியைச சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகப்பதற்காக உரிமம் பெறாமல் ஜெலட்டின் குச்சிகள் 36 நான் டெட்டர்னேட்டர் 8 மற்றும் கம்ப்ரசர் வாகனம் ஒன்று ஆகியவற்றை கொண்டு தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை வெடிக்க வைக்க முயன்ற பொழுது உரிய அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதால் அதை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
News November 15, 2025
ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News November 14, 2025
ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.


