News June 18, 2024

43 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்

image

தமிழகத்தில் ‘மாதவிடாய் சுகாதாரத் திட்டம்’ மூலம் மாணவிகளுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இன்னும் மாதவிடாய் நேரங்களில் துணிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 43 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News January 25, 2026

மகளிர் உரிமைத் தொகை.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

image

1.30 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மகளிரும் இதுவரை ₹29,000 பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை தங்களது அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என ஒவ்வொரு மகளிரும் கூறுவதாகவும் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News January 25, 2026

இரவில் சமைத்த உணவை காலையில் சுட வைக்குறீங்களா?

image

இரவில் சமைத்த உணவு மீந்துவிட்டால், அதை காலையில் சுட வைத்து சாப்பிடும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. ஆனால், இப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை கண்டிப்பாக சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள். அடுத்த முறை கவனமா இருங்க!

News January 25, 2026

தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

image

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!