News January 15, 2025
32 ஆண்டு தீவு வாழ்க்கையும், 3 ஆண்டு நகர வாழ்க்கையும்

‘ராபின்சன் க்ரூசோ’ என செல்லமாக அழைக்கப்படும் இத்தாலியை சேர்ந்த மெளரா மொரண்டி, தனது 85ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 1989இல் இந்த ஊரே வேணாம் எனக் கிளம்பியவர், நடுக்கடலில் படகு உடைந்து புதெல்லி தீவை அடைந்தார். 32 ஆண்டுகளாக அத்தீவில் தனியாக வாழ்ந்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் நகருக்கு திரும்பியவர், இப்போது காலமானார். தீவு வாழ்க்கை அவரை 32 ஆண்டு வாழ வைத்தது. நகர வாழ்க்கையோ, மூன்றே ஆண்டில் முடிந்தது!
Similar News
News November 11, 2025
உங்களை பற்றி கூகுள் என்ன நினைக்குது? CHECK THIS

நீங்கள் ஆன்லைனில் செய்யும் விஷயங்களை வைத்து உங்களை பற்றி கூகுள் என்ன தெரிந்துவைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஈஸியான வழி இருக்கிறது. ➤Desktop-ல் Google Ads settings என கூகுளில் Search பண்ணுங்க ➤Ads settings-க்குள் சென்றால் கூகுள் உங்களை பற்றி சேமித்துவைத்திருக்கும் தகவல்கள் காட்டும் ➤இதில் எதையாவது நீங்கள் நீக்க விரும்பினால், தகவலை க்ளிக் செய்து Turn Off கொடுங்கள். SHARE.
News November 11, 2025
கிரிக்கெட் வீராங்கனை பெயரில் ஸ்டேடியம்!

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். இந்நிலையில், அவரது பெயரில் மேற்கு வங்கத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அம்மாநில CM மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னதாக, மாநில அரசின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதும், காவல்துறையில் DSP பணியும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


