News January 15, 2025

32 ஆண்டு தீவு வாழ்க்கையும், 3 ஆண்டு நகர வாழ்க்கையும்

image

‘ராபின்சன் க்ரூசோ’ என செல்லமாக அழைக்கப்படும் இத்தாலியை சேர்ந்த மெளரா மொரண்டி, தனது 85ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 1989இல் இந்த ஊரே வேணாம் எனக் கிளம்பியவர், நடுக்கடலில் படகு உடைந்து புதெல்லி தீவை அடைந்தார். 32 ஆண்டுகளாக அத்தீவில் தனியாக வாழ்ந்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் நகருக்கு திரும்பியவர், இப்போது காலமானார். தீவு வாழ்க்கை அவரை 32 ஆண்டு வாழ வைத்தது. நகர வாழ்க்கையோ, மூன்றே ஆண்டில் முடிந்தது!

Similar News

News December 7, 2025

கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

image

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

News December 7, 2025

புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்

image

2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் தங்களது ராசிக்கான பலன்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி வரும் புத்தாண்டில் ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என கணித்துள்ளார். குறிப்பாக கன்னி ராசியின் 11-வது இடத்தில் குரு உச்சமடைய உள்ளதால் அதீத நன்மை என தெரிவித்துள்ளார். இதில் உங்கள் ராசி உள்ளதா?

News December 7, 2025

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

image

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு சென்று செலவு செய்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!