News May 5, 2024
30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் ராதா தலைமையில் போலீசார், ஈரோடு மாவட்டம், குமரபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (23), தேவரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (21), நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் (23) ஆகிய 3 பேரை கைது செய்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 12, 2025
திருவள்ளூர் காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (12.11.2025) பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறிந்ததுடன், தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் இதில் பயனடைந்தனர்.
News November 12, 2025
திருவள்ளூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News November 12, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


