News January 12, 2025

3 பேருக்கு மூளையில் சிப்.. பாய்ச்சலில் மஸ்க்!

image

இதுவரை 3 மனிதர்களுக்கு மூளையில் சிப் பொறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 2025ல் 20- 30 பேருக்கு சிப் பொறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் மூலம் கை, கால்களை இழந்தவர்கள் செல்போன், கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பார்வை இழந்தவர்களுக்கான சாதனத்தை உருவாக்கி, அவர்களை மீண்டும் கண் பார்வையை வழங்குவதுதான் தங்களது அடுத்த இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

BREAKING: இந்தியா அபார வெற்றி

image

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது unofficial ODI-ல் இந்தியா A 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த SA, 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிஷாந்த் சிந்து 4 விக்கெட், ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ருதுராஜ் அரைசதம் விளாசிட, 133 ரன்கள் இலக்கு 27.5 ஓவர்களில் சேஸ் செய்யப்பட்டது.

News November 16, 2025

பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

image

பிரண்டையில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது. *சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் குணமாகும் *மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலிக்கு சிறந்த மருந்து *செரிமான சக்தியை அதிகரிக்கும் *ரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் *பிரண்டையில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி நிறைந்தது.

News November 16, 2025

சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகினார்

image

பாஜகவில் இருந்து <<18296121>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்ட Ex மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பிஹார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ₹62,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், தவறுகளை சுட்டிக் காட்டினால் கட்சிக்கு விரோதமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!