News August 5, 2024
296 கோடியில் புத்தன் அனை புதிய குடிநீர் திட்ட பணிகள்

நாகர்கோவில் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக 296 கோடியே 8 லட்சம் செலவில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் நிறைவுற்ற நிலையில் 12ஆம் தேதி முதல்வர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் குடிநீர் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்தப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து இன்று உயர் அதிகாரிகள் வர உள்ளனர்.
Similar News
News January 17, 2026
குமரி: தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி

நெல்லை- அம்பை பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (23). வேத பாடசாலை மாணவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் பூஜைக்காக நேற்று முன் தினம் திற்பரப்பு அருவிக்கு சென்றனர். நேற்று பூஜைகள் முடிந்ததும் தடுப்பு அணைக்கு குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஷ்வா தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு GH-ல் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
News January 17, 2026
குமரி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
குமரி: ஆட்டோ கவிழ்ந்து பரிதாப பலி

திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல புத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த மாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


