News August 5, 2024

ஷேக் ஹசீனாவை கண்காணித்த 29 ஆயிரம் பேர்

image

வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பயணித்த விமானத்தை பிளைட் ரேடார் 24 இணையதளத்தின் மூலம் அதிகம் பேர் கண்காணித்தது தெரியவந்துள்ளது. AJAX1413 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானம் உ.பி மாநிலம், ஹிண்டன் ராணுவ படை விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஷேக் ஹசீனா வானில் பயணித்த நேரத்தில், அவர் பயணித்த விமானத்தை 29 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கண்காணித்துள்ளனர்.

Similar News

News January 23, 2026

இனி Wifi வேகம் அதிகரிக்கும்!

image

இந்திய தொலைத்தொடர்புத் துறை, மே 2025ல் 6 GHz அலைவரிசையில் 500 MHz அலைக்கற்றையை Wi-Fi சேவைகளுக்காக பொது பயன்பாட்டிற்கு விடுவிப்பதாக முன்மொழிந்தது. இந்நிலையில், 6 GHz Wi-Fi பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் Wifi வேகம் அதிகரிக்கும். மேலும், இதை உபயோகிக்க உரிமம் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

News January 23, 2026

ஜனவரி 23: வரலாற்றில் இன்று

image

*1897 – சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள். *1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. *1973 – அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமுடன் சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தார். *2004 – மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. *2005 – ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.

News January 23, 2026

ஆளுநர் உரை நடைமுறையை நீக்க வேண்டும்: CM ஸ்டாலின்

image

தமிழ்நாட்டைப் போல கேரளா, கர்நாடகாவிலும் ஆளுநர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். மாநில அரசு தயாரிக்கும் உரை படிக்க மறுப்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!