News May 2, 2024
டெல்லி மகளிர் ஆணைய ஊழியர்கள் 233 பேர் பணி நீக்கம்

டெல்லி மகளிர் ஆணையத்தில் பணியாற்றிய 233 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அவர்களை நியமித்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
News December 15, 2025
IND vs SA: அக்சர் படேல் அணியில் இருந்து விடுவிப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், SA-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து அக்சர் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷெபாஷ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளிலும், SA ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியிருக்கும் 2 போட்டிகள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.


