News July 5, 2025
23 வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம்

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தற்கா பகுதியில் தகராறில் ஈடுபட்ட வசந்த் என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். மேலும் வசந்த் மீது கொலை முயற்சி அடிதடி என மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வசந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: இலவச போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி

திருவாரூர் மாவட்டம் தாட்கோ வழங்கும் இலவச போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக பயிற்சி 1 மாதம் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது 18 முதல் 35, வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233174>>பாகம்-2<<>>)
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..


