News October 15, 2024
21,000 மாநகராட்சி ஊழியர்கள் தயார்

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று நள்ளிரவு முதல் சென்னை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில், 21,000 மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்கள் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 1/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், சைதாப்பேட்டை ரோடு, காமராஜர் சாலை, நடேசன் சாலை, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள். <<16986157>>தொடர்ச்சி<<>>
News July 8, 2025
சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.