News November 11, 2024

நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

image

நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சம்மன் அளிக்க கஸ்தூரி வீட்டுக்கு போலீஸ் சென்றபோது பூட்டிக் கிடந்தது. இதனிடையே, ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி கஸ்தூரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Similar News

News November 12, 2025

PAK குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? உண்மை இதோ!

image

இஸ்லாமாபாதில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், தாக்குதலுக்கு பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2025

RCB ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

image

கூட்ட நெரிசல் விவகாரம், RCB அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. நடப்பு சாம்பியனாக 2026 தொடரில் களமிறங்கும், அந்த அணி ஒரு போட்டியை கூட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம். அதற்கு பதிலாக புனே ஸ்டேடியத்தை, RCB அணி ஹோம் கிரவுண்டாக தேர்வு செய்துள்ளதாம். தொடர்ந்து அணிக்கு ஆதரவாக இருந்து வரும், RCB ரசிகர்களுக்கு இது பெரும் சோக செய்தியே.

News November 12, 2025

BREAKING: கூட்டணி முடிவை எடுத்தார் பிரேமலதா

image

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும், சிலர் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் கருத்துகளை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரேமலதா, உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!