News October 9, 2025

இருமல் சிரப் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

image

கோல்ட்ரிப் இருமல் சிரப் விவகாரத்தில், முறையாக ஆய்வு செய்யாத 2 மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதோடு, ஓரிரு நாட்களில் Coldrif சிரப்பை தயாரித்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். முன்னதாக, பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 17, 2025

66 வருடங்களில்.. இதுவே இந்தியாவில் முதல்முறை

image

நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில், 4 இன்னிங்ஸ்களும் 200க்கும் குறைவான ரன்களில் முடிந்தன. இது டெஸ்ட் வரலாற்றில் மிக அரிய நிகழ்வு. கடந்த 66 ஆண்டுகளில் இதுபோல 200க்கும் குறைவான ரன்களில் முடிந்தது இல்லை. ESPN தகவலின்படி, இது டெஸ்ட் வரலாற்றில் 12வது முறையாக நிகழ்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவே முதல் முறையாக நடந்ததுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News November 17, 2025

BREAKING: நாளை விடுமுறை இல்லை… அறிவித்தது அரசு

image

SIR பணிகளை புறக்கணித்து <<18309481>>நாளை போராட்டத்தில் <<>>ஈடுபடவுள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ விடுப்பை தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

ரஜினியிடம் பேய் கதை கூறிய சுந்தர்.சி ?

image

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி கூறிய பேய் கதையின் முழு script ரஜினிக்கு பிடிக்காமல் போனதாலேயே அவர் விலகியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பேய் கதையை சுந்தர்.சி, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்தானம் மற்றும் விஜய் சேதுபதியிடம் சொல்லியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

error: Content is protected !!