News November 22, 2024
கீழே சிந்திய ரேஷன் அரிசியால் ரூ.1,900 கோடி நஷ்டம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசியால் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது ICRIER வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில், 2022 – 23 ஆம் ஆண்டில் 5.2 லட்சம் டன் அரிசியில் 15.8% கசிவு ஏற்பட்டு சிந்தியதாகக் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மில்லியன் ரேஷன் பொருட்கள் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. இதில் ரூ.69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
தமிழ் நடிகர் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்

மோசடி புகாரில் நெல்லையில் வைத்து பிக்பாஸ் பிரபலம் தினேஷ் <<18275184>>கைது<<>> செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை என்றும், இது நன்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட போலியான புகார் என்றும் தினேஷ் விளக்கமளித்துள்ளார். வள்ளியூரில் வேறு ஒரு பிரச்னையில் தான் வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருவதாகவும், தனது தொழிலில் உள்ள ஒரு சிலரால் இந்த புகார் போலியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 13, 2025
டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது

<<18274461>>டெல்லி குண்டுவெடிப்பு <<>>சம்பவத்தில் லக்னோவை சேர்ந்த டாக்டர் பர்வேஸ் அன்ஸாரியை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷகித்தின் தம்பி என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை பர்வேஸ் அன்ஸாரி ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News November 13, 2025
குளிர்கால சரும பொலிவுக்கு நைட்ல இத பண்ணுங்க!

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். Moisturizer தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த கிரீமை செய்து தடவுங்கள். *2 வைட்டமின் E கேப்ஸ்யூல்கள், 4 துளி ஆலிவ் ஆயில், 2 துளி பாதாம் ஆயில், 4 துளி ரோஸ்மேரி எண்ணெய், ஒரு ஸ்பூன் பப்பாளி ஜெல் ஆகியவற்றை நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவினால் முகம் பொலிவாக மாறும்.


