News January 14, 2025

18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

image

கடந்த 2023-24-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு பதிவு செய்து விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள 6 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு உற்பத்தி செய்து வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.215 வீதம் சம்பந்தப்பட்ட 18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடியே 21 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

விழுப்புரம்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வீடூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில்
நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 10, 2025

விழுப்புரம்: இளைஞர் மீது குண்டாஸ்!

image

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைமாற்றிய வழக்கில் மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில் நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!