News July 10, 2024

திருப்பூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு

image

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி வெற்றிபெற சேப்பாக் அணி 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பிரதோஷ் ரஞ்சன் அண்ட்ரே 67, ஜெகதீசன் 36 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் அணியின் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News July 9, 2025

பெண்கள் நீண்ட நேரம் தூங்கினால் தான்..

image

தினமும் ஆண்களைவிட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுகிறதாம். ஆராய்ச்சிகளின் படி, பெண்கள் அதிகம் multi-task செய்பவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை நுட்பமாக கையாளுவதால், அவர்களின் மூளை அதிகமான ஆற்றலை பயன்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு கூடுதல் தூக்கம் தேவை. தூக்கம் குறைந்தால், மன அழுத்தம், பதட்டம், இதய நோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்க எவ்வளோ நேரம் தூங்குவீங்க?

News July 9, 2025

பணத்தை வாங்கிட்டு அப்பெண் தான் ஏமாற்றினார்: யஷ் தயாள்!

image

பெண் ஒருவர் கொடுத்த <<16987106>>புகாருக்கு<<>> RCB வீரர் யஷ் தயாள் பதிலளித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தான் Iphone மற்றும் பல லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறிய யஷ் தயாள், அவற்றை அப்பெண் திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஷாப்பிங்கிற்கு செலவு செய்யவும், அப்பெண்ணின் உறுப்பினர்களின் சிகிச்சைக்கு தான் பணம் அளித்துள்ளதாக தெரிவித்த யஷ் தயாள், இவற்றுக்கு தன்னிடம் Proof இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

News July 9, 2025

₹1.23 லட்சம் சம்பளம்… டிகிரி போதும்

image

இந்திய கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் 170 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்து, பின் டிகிரி முடித்த 21-25 வயதினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி & நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடக்கும். சம்பளம்: ₹56,100 – ₹1.23 லட்சம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23. இணைய முகவரி: https://joinindiancoastguard.cdac.in/

error: Content is protected !!