News March 23, 2024
13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 7, 2025
மதுரைக்கு இன்று மஞ்சள் ஆலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.7) மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் ஆலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
News November 7, 2025
மதுரை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

மதுரை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0452 – 2580259 மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
News November 7, 2025
மதுரை: ரேஷன் அட்டையில் குறைகளை தீர்க்க நாளை முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம், நவம்பர் 8-ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்களில் நடைபெறும் இந்த முகாமில், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பிற குறைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்து தீர்வு பெறலாம்.


