News November 19, 2024
12 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 12 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பெற்றுள்ளது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் வசந்தி, ஆமத்தூர் பகுதிக்கும், அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிந்த சொர்ணலட்சுமி அருப்புக்கோட்டை வருவாய் ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
விருதுநகர்: ஆசையாக வளர்த்த ஆடு பலி – மாணவர் தற்கொலை

விருதுநகர், நரிக்குடியை சேர்ந்தவர் பாண்டி மகன் செந்தில்குமார். அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். இவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சேமித்து ஆசையாக செம்மறி கிடாய் குட்டி வாங்கினார். சமீபத்தில் பெய்த கனமழைக்கு அக் குட்டி நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் டிச., 1 ல் விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார்.
News December 4, 2025
காரியாபட்டி அருகே நாகாத்தம்மன் கோயில் திருவிழா

காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் புத்துக்கோயில் 7-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் விழாவில் பக்தர்கள் அழகு குத்தி, காவடி எடுத்து, முளைப்பாரி வளர்த்து தன்னுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


