News March 25, 2024
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க மாணவர்கள் தேர்வறைக்கு அரைமணிநேரம் முன்பே செல்லுங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.
Similar News
News November 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 522
▶குறள்:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
▶பொருள்: எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
News November 17, 2025
NATIONAL 360°: ஹைதராபாத்தில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் கார்

சூரத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் ஸ்டேஷன் பணிகளை PM மோடி ஆய்வு செய்தார். டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஹைதராபாத்தில் அதிக வெப்பமடைந்ததால் எலக்ட்ரிக் காரில் பற்றி எரிந்து தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். டெல்லியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகே அரை நிர்வாணத்துடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

நீங்கள் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உங்களை ஒருபோதும் சுருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களை நீங்கள் வெளிப்படுத்துவது, சுய விழிப்புணர்வின் அறிகுறிகள், சுமை அல்ல. இதேபோல், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


