News December 15, 2025
1 பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் ❤️❤️

இன்றைய நவீன காலத்தில் ஒரு குழந்தையே போதும் சாமி! என பெற்றோர்கள் நினைக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் 40 வயதான பழங்குடியின பெண் ஒருவர், திருமணமான 18 ஆண்டுகளில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், இது கடவுளின் விருப்பம்!, 5 மகன்கள், 5 மகள்கள் சுக பிரசவத்தில் பிறந்ததாக பெருமிதத்துடன் கூறும் அவர், தனது மனைவிக்கு கருத்தடை செய்ய பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
3-வது T20I: பும்ரா IN, ஹர்ஷித் OUT?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது T20I போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. பேட்டிங்கில் மாற்றம் இருக்காது என கூறப்படும் நிலையில், அணியில் மீண்டும் பும்ரா சேர்க்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. கை விரலில் காயம் ஏற்பட்டு 2-வது போட்டியில் விளையாடாத அக்சர் படேலும் இன்றைய போட்டியில் விளையாடலாம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் அணிக்கு திரும்பினால், ராணா & குல்தீப் நீக்கப்படலாம்.
News January 25, 2026
மொழிப்போர் தியாகிகளுக்கு EPS வீரவணக்கம்

ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சங்கத்தில் வளர்ந்து, சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும், நம் உயிருக்கு நேராம், செந்தமிழர் தாயாம் அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என EPS பதிவிட்டுள்ளார்.
News January 25, 2026
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு!

மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக மத்திய தொழில் துறை அமைச்சரும், மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். ஹாசனில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், மாநில விவசாயிகளுக்கு செய்ய விரும்பிய சிலவற்றை தன்னால் செய்ய முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். இதனால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2028 பேரவைத் தேர்தலுக்காக மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


