News October 8, 2025
விழுப்புரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்!

விழுப்புரம் கோனுாரை சேர்ந்தவர் வெங்கடேசன் (50) வீட்டில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வரும் இவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுவனை, கடந்த 4 ஆண்டுகளாக, அவரது வீட்டில் கொத்தடிமையாக வைத்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள், சிறுவனை மீட்டனர். இதுகுறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
விழுப்புரத்தில் வீடு புகுந்து கொள்ளை ; போலீஸ் வலை!

விழுப்புரம்: ஆடல் நகர் பகுதியில் பாண்டியன் எனபவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நுழைந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அவர் திரும்பியபோது இது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
இந்திய அளவில் கலக்கிய விழுப்புரம் காவலர்!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார் கராத்தே பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கடந்த மாதம் 8 முதல் 16 வரை நடந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாதனை புரிந்த வருண்குமாரையும், அவரது பயிற்சியாளர் குணசேகரனிடம் எஸ்.பி சரவணன் பாராட்டினார்.
News November 14, 2025
விழுப்புரம்: இனி வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


