News November 14, 2025
விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 14, 2025
ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.
News November 14, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி முன்பு அதிகாரிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் முதன்மை என காவல்துறை தெரிவித்தது.
News November 14, 2025
அரக்கோணத்தில் சூப்பர் அரசு வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணக்காளர், இரவு காவலர், பியூன் என பல்வேறு கற்றல், கற்றல் இல்லாத பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


