News December 1, 2025
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி காயம்

ஆவரங்குளம் – இடையப்பட்டி செல்லும் வழியில் அரசகுளம் கார்த்திக்(32),மனைவி கார்த்தீஸ்வரியுடன் பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்ற போது பக்கத்து தோட்டத்தில் போட்டிருந்த மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ஆவரங்குளம் குணசேகரன் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News December 2, 2025
விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
விருதுநகர்: 10th, 12th தகுதி.. மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 2, 2025
சிவகாசி அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை

சிவகாசி பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பூ வியாபாரி ஜெயச்சந்திரன் 57. டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை. இவர் வீட்டில் பிளேடால் தனது கழுத்தில், கையில் அறுத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


