News November 14, 2025

மாஸ்க்கை அகற்ற முடியாது.. யார் இந்த புஷ்பம் ப்ரியா?

image

நிதிஷ்குமாருக்கு நெருக்கமான அரசியல் பிரபலத்தின் பேத்தியான புஷ்பம் ப்ரியா செளத்ரியின் புளூரல்ஸ் கட்சி, 243 தொகுதிகளிலும் போட்டியிட்டது. எப்போதும் கருப்பு உடை, முகக்கவசம் அணிந்திருக்கும் புஷ்பம், தேர்தலில் வென்ற பிறகே மாஸ்கை அகற்றுவேன் என சவால் விட்டிருந்தார். ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சி முன்னிலை பெறவில்லை. புஷ்பம் போட்டியிட்ட டர்பங்கா தொகுதியில், இதுவரை 750 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

Similar News

News November 14, 2025

BREAKING: தேஜஸ்வி யாதவ் வெற்றி

image

பிஹார் தேர்தலில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேஜஸ்வி யாதவும், BJP-ன் சதீஷ் குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இழுபறி நீடித்த நிலையில், தற்போது 11,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

image

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

News November 14, 2025

BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.

error: Content is protected !!