News October 6, 2025

மார்த்தாண்டம் அருக பைக் மோதி மூதாட்டி பலி

image

மார்த்தாண்டம் பாட்டவிளை சுகுமாரன் மனைவி சுகுமாரி (81) இன்று காலை மேல்புறம் வங்கிக்கு சென்று பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து, பாகோடு மாவறத்தலவிளை அருகே செல்லும்போது எதிரில் வந்த பைக் மோதியது. இதில் சுகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த அருமனை முரம்புவிளை பிரவின்ராஜ் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

Similar News

News November 14, 2025

குமரி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

கன்னியாகுமரி – ஹைதராபாத் ரெயில் நீட்டிப்பு

image

தெற்கு மத்திய ரெயில்வே 8 சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07230 ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் டிச.3 முதல் ஜன. 21.ம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07229 கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரெயில் டிச.5.ம் தேதி முதல் ஜன.23.ம்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நேற்று துவங்கியது.

News November 14, 2025

குமரியில் பெண்கள் உட்பட 1067 பேர் கைது

image

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதத் தங்கராஜை கண்டித்து குமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பங்கேற்ற 144 பெண்கள் உட்பட 1067 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் MLA எம்ஆர் காந்தி ஆகியோர் அடங்குவர்.

error: Content is protected !!