News November 1, 2025
மாணவர்களுக்கு பாடம் எடுத்த முதன்மை கல்வி அலுவலர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கல்வி வட்டாரத்துக்கு உட்பட்ட வேங்கைபாடி கிராமத்தில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.1) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
Similar News
News November 2, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

கள்ளக்குறிச்சி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அதிரடி!

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது எறஞ்சி என்ற இடத்தில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து லாரி ஒட்டுனர் விருதாச்சலம் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை இன்று (நவ.1) அதிகாலை கைது செய்தனர்.
News November 2, 2025
கள்ளக்குறிச்சி: இரயில்வே வேலை,ரூ.30 ஆயிரம் சம்பளம்!

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.


