News November 12, 2025
மயிலாடுதுறை: புனித யாத்திரை செல்ல மானியம்

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்துவ பயனாளிகளுக்கு ஜெருசலம் புனித பயண மானிய திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்டவர்கள் பிப்ரவரி 28-க்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 550 பயனாளிகளுக்கு ரூ.37000 மற்றும் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு ரூ. 60,000 சிறப்பு மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை: பிரபல கோயிலில் திருட்டு

கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் கோவிலை திறந்த போது கோயில் கருவறை முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
News November 12, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 11, 2025
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.11) நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட இந்த வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


