News November 12, 2025
மயிலாடுதுறை: பிரபல கோயிலில் திருட்டு

கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் கோவிலை திறந்த போது கோயில் கருவறை முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் கடந்த அக.20-ம் தேதி ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டு மாத பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 12, 2025
மயிலாடுதுறை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
மயிலாடுதுறை: புனித யாத்திரை செல்ல மானியம்

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்துவ பயனாளிகளுக்கு ஜெருசலம் புனித பயண மானிய திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்டவர்கள் பிப்ரவரி 28-க்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 550 பயனாளிகளுக்கு ரூ.37000 மற்றும் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு ரூ. 60,000 சிறப்பு மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


