News November 26, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (25.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடி அருகே இ.எம்.டி. நகர் விரிவாக்க பகுதி சேர்ந்த மகேந்திரன் 67 மனைவியுடன் 10 நாட்களுக்கு முன் பரமக்குடி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை ரூ 45 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: தூங்கி கொண்டிருந்த ரவுடி குத்தி கொலை

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை போலீசாரின் ரவுடி பட்டியில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்த 10 நாட்களாக நிலையில், அப்பகுதி நாடக மேடையில் நேற்று மாலை தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது, பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை

திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி லட்சுமி(55). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சமீபமாக தொடர்ந்து வலி தாங்க முடியாமல் போக, விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


