News November 1, 2025

மதுரை மாநகராட்சியில் புதிய மினி ரோபோட் தொடக்கம்

image

மதுரை மாநகராட்சிக்குள் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் புதிய மினி ரோபோட் வாகனம் இன்று (01.11.2025) தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா விஜயன், பயன்பாட்டுத் துறை உதவி பொறியாளர் அலிநீத் மற்றும் சாவனா ஸ்பேர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 2, 2025

மதுரை: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

மதுரைக்கு கிடைத்த முதலிடம்: மக்கள் வேதனை

image

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவில் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மதுரை முதலிடத்தில் உள்ளது. சென்னை 4-ம் இடத்தில் உள்ளது. திட்டமிடப்படாத விரிவாக்கம், மோசமான கழிவு மேலாண்மை, சுகாதார அலட்சியம் ஆகியவற்றை கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ ஆகியவை தூய்மை நகரங்கள் இடத்தை பிடித்துள்ளன.

News November 2, 2025

மதுரையில் அடுத்தடுத்து நகை பறிப்பு

image

மதுரை ஆரப்பாளையம், SS காலனி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (70) வீட்டில் தனியாக இருந்த போது அங்கே மர்மநபர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இதேபோல, மதுரை பைபாஸ்ரோடு பகுதியில் வங்கி மேலாளர் சக்திவேல் மனைவி லட்சிகாவிடம் டூவீலரில் வந்த 2 மர்மநபர்கள் 9 பவுன் நகையை பறித்தனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!