News November 12, 2025
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு புதிய பரிசா?

வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்களின் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, அரசின் தொகுப்புடன் பொங்கல் பானைகளையும் வழங்க வேண்டும் என மண் பாண்ட தொழிலாளர்கள் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதிநிலைமை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 13, 2025
இது ஐபோன் பாக்கெட்.. ₹26,000 மட்டுமே

ஐபோன்களை எளிதில் எடுத்துச் செல்வதற்காக ஆப்பிள் நிறுவனம் கலர் கலரான பைகளை அறிமுகம் செய்துள்ளது. fabric பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அந்த பையில் ஐபோனை வைத்து கை, தோளில் மாட்டிக்கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி ₹26,000 மட்டுமே ஆகும். இது பார்ப்பதற்கு பாட்டி காலத்து சுருக்கு பை போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.
News November 13, 2025
விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 13, 2025
₹397 கோடி ஊழல்.. திமுக அரசு மீது அறப்போர் புகார்

₹397 கோடி ஊழலின் முக்கிய புள்ளிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக (CFC) பதவி உயர்வு பெற்றுள்ள காசி , டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து செய்த செட்டிங் காரணமாக சந்தை விலையை விட 40% அதிகமாக டெண்டர் ஆணை வழங்கப்பட்டதாக புகாரளித்துள்ளது. இது திமுக ஊழல் மாடலின் மற்றொரு சாதனை என்றும் அறப்போர் சாடியுள்ளது.


