News November 2, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News November 2, 2025

பெரம்பலூரில் சோழன் வெட்டிய ஏரி தெரியுமா?

image

ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க ‘சோழகங்கம் ஏரி’ என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவிற்கு கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும் கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க!

News November 2, 2025

பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்த பெரம்பலூர்

image

தமிழகத்தில் ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த வனப்பகுதியான பெரும்புலியூர் தான் இன்று பெரம்பலூராக மாறியுள்ளது. இதுமட்டும் அல்லாது, லாடபுரம் என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி கோயிலில் பாண்டவர்களால் வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நம்ம பெரம்பலூரின் பெருமையை SHARE செய்ங்க…

News November 2, 2025

பெரம்பலூர்: தேர்தலுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

error: Content is protected !!