News November 1, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உதயநாள் விழா

புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உதயநாள் விழா ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Similar News
News November 2, 2025
புதுச்சேரி வரலாற்று புகைப்பட கண்காட்சி

புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், மாணவர்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
News November 2, 2025
புதுவை: சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சராயு பாண்டூரங் ஹாண்டே. இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் புதுவைக்கு அக்.31 அன்று சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது ஹண்டேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 2, 2025
புதுச்சேரி: குழந்தை பிறந்த உடனே சான்றிதழ்!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற நகராட்சி அலுவலகங்களில் காத்திருந்து பெறும் சூழல் இருந்து வந்தது. இதனை மாற்ற மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புதுச்சேரியும் இணைந்துள்ளது. இதன் மூலம் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலேயே பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். அந்த வகையில் நேற்று புதுச்சேரியில் பிறந்த உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்தது.


