News November 12, 2025
புதுகை: சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புன்னியவயல் கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏசி வாகனம் மோதியதில் மூரியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி குமார் மற்றும் அவரது மனைவி பழனிமுத்து ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
புதுகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <
News November 12, 2025
புதுகை: சட்டவிரோத மது விற்பனை-ஒருவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜமாணிக்கம் (75) என்பவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காரையூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News November 12, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


