News November 14, 2025
பிஹாரில் திடீர் ட்விஸ்ட்

பிஹாரில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 உடன் ஒப்பிடுகையில் சுமார் 39 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் சூழல் உருவாகிருப்பதால், நிதிஷின் கரம் அங்கு இன்றளவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேடியு பின்னடைவை சந்தித்த நிலையில், நிதிஷ் CM வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் பெரும் ட்விஸ்ட் தான்.
Similar News
News November 14, 2025
கண்ணீருடன் உதயநிதி நேரில் அஞ்சலி

உதயநிதியின் நண்பரும், அவரின் டிரைவருமான பாலாவின் தந்தை ரவி, உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு வேதனையடைந்த உதயநிதி, முதல் ஆளாக ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ரவியின் உடலை பார்த்ததும் அவர் கண்கலங்கி அழுதார். தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News November 14, 2025
தோல்வின்னு சொல்ல முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹாரில் MGB கூட்டணி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, காங்., 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால் இதை தோல்வி என்று சொல்ல முடியாது, வெற்றிவாய்ப்பை இழந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தேர்தலின் முழு முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்ற அவர், ஆட்சி, அதிகாரத்தை சுவைக்க நினைக்கும் இயக்கம் காங்., அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பிஹாரில் சைலண்ட்டாக ஸ்கோர் செய்யும் கட்சி

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும் 29 தொகுதிகளில் 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சீட் பங்கீட்டிங் போது இந்த கட்சிக்கு 29 தொகுதிகளை ஒதுக்கவே பாஜக தயங்கியது. ஏனென்றால் 2020 தேர்தலில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி 130 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே ஜெயித்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் 75% வாக்குகளை கவர் செய்து LJP ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


