News August 11, 2025

பாலியல் தொல்லை கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு

image

அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இவர் மீது 2021-ல் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் கெபிராஜ் குற்றவானி என தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Similar News

News August 12, 2025

மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

image

சென்னையில் இன்று (ஆக.12) அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், பெருங்குடி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<> இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

இல.கணேசனுக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 3-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்கை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News August 12, 2025

ஆதார் இல்லாததால் பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்

image

பூவிருந்தவல்லியை சேர்ந்த மாணவன்சந்தோஷ். இவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதார் அட்டை இல்லாததால் பல சிரமங்களை சந்தித்துள்ளார். இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட பல அலுவலகங்களுக்குச் சென்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!