News November 14, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
News November 14, 2025
சுற்றுச்சூழல் நாயகி காலமானார்!

கர்நாடகாவை சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், பத்மஸ்ரீ சாலுமரத திம்மக்கா காலமானார். ‘மரங்களின் அன்னை’ என கர்நாடக மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், சுமார் 80 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து, 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். 114 வயதான அவர், வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வணங்குகிறோம் தாயே!
News November 14, 2025
MGB கூட்டணி தோல்விக்கு 3 காரணங்கள்

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் MGB கூட்டணியின் தோல்விக்கு இந்த 3 காரணங்களை சொல்லலாம்: 1) NDA-வில் அதிக கட்சிகள் உள்ளன. MGB-யில் சில கட்சிகள் மட்டுமே. 2) தேர்தலுக்கு முன்பே பெண்களுக்கு <<18261283>>₹10,000 கொடுத்தது<<>>, அவர்களின் வாக்கை மொத்தமாக NDA பக்கம் திருப்பிவிட்டது. 3) MGB கூட்டணி யாதவர்கள், முஸ்லீம் வாக்காளர்களை நம்பி இருக்க, NDA அனைத்து சமூக வாக்காளர்கள், EBC வாக்குகளில் கவனம் செலுத்தியது.


