News December 1, 2025
நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் விலைப்புள்ளி பட்டியலை தயார் செய்து, www.msmeonline.tn.gov.in/twees விண்ணப்பிக்கலாம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தீவனச் செலவு, மழை, குளிர் ஆகியவை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த ஒரு வாரமாக நிலைத்து உள்ளது.
News December 1, 2025
நாமக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


