News November 14, 2025
நாகை: நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்!

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மேமாத்தூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.15) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!
Similar News
News November 14, 2025
நாகப்பட்டினம்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
நாகை: புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவன தலைவர் கைது

கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி பகுதியை சேர்ந்தவர் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவன தலைவர் ஆனந்தராஜ் (53). இவர் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் பற்றி கேலி சித்திரம் பதிவிட்டு அவதூறாகவும், தவறாக சித்தரித்தும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.
News November 14, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று(நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


