News November 2, 2025
நாகை இளைஞர் குண்டாஸில் கைது

நாகை மாவட்டம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). இவர் பேஸ்புக் மூலம் குறைந்த விலைக்கு கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் மோசடி செய்தார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, அடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி, நேற்று ரமேஷ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 2, 2025
நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நாகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

நாகை மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News November 2, 2025
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


