News November 2, 2025

நாகையில் 96,865 டன் நெல் கொள்முதல் – ஆட்சியர் தகவல்

image

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவ நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 96,865 டன் நெல் அரசு மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மொத்தம் 123 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இதுவரை 82,478 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும் 14,387 டன் நெல் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News November 2, 2025

நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

நாகை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 2, 2025

நாகை இளைஞர் குண்டாஸில் கைது

image

நாகை மாவட்டம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). இவர் பேஸ்புக் மூலம் குறைந்த விலைக்கு கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் மோசடி செய்தார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, அடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி, நேற்று ரமேஷ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!