News October 12, 2025
திருவாரூர்: ஆசிரியர் நியமனத் தேர்வு-ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 12) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். மேலும் இந்த தேர்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
Similar News
News December 7, 2025
திருவாரூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
திருவாரூர்: புதிய மருத்துவ இணை இயக்குனர் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டத்தின் மருத்துவ இணை இயக்குனர் பணியில் மருத்துவர் S.சுரேஷ்குமார் என்பவர் நேற்று (டிச.06) புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று புதிதாக பதவியேற்ற மருத்துவ இணை இயக்குனர் சுரேஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


