News November 30, 2025

திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (01.12.2025) கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாவதால் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குடியிருப்போர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரைகளில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

திருவள்ளூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 2, 2025

நாரவாரிகுப்பம் சந்தையின் இன்றைய விலை விபரம்

image

திருவள்ளூர்: நாரவாரிகுப்பம் உழவர் சந்தையில் இன்று (டிச-2) காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி (1கிலோ) பெரிய வெங்காயம் ரூ.30, கத்திரிக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.60 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரத்து நிலை இயல்பாக நீடித்ததால் விலை மாற்றங்கள் இல்லாமல் இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

News December 2, 2025

டிட்வா புயல்: திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு மழையால் சிரமம், புகார்களை தெரிவிக்க 044-27664177, 044-27666746 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் மூலம் 9444317862, 9498901077 புகார் அளிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!