News November 2, 2025
திருப்பூர்: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
Similar News
News November 2, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 02.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அனுப்பவும்.
News November 2, 2025
திருப்பூர் அருகே சிறுவன் கொலை?

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் ரோபிக். இவர் குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் பகுதியில் உள்ள நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 9 வயது மகன். மில் குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
திருப்பூர்: போதையில் வீட்டுக்கு தீ வைப்பு

திருப்பூர், கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்த செல்லப்பா வீட்டிற்கு தீ வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


