News November 13, 2025

திண்டுக்கல் மக்களே நம்பாதீங்க! எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மக்களுக்கு சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் ஒரு பரிசு வென்றீர்கள்” (You won a prize) அல்லது பரிசு பொருட்கள் கிடைத்ததாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம். இது போன்ற குறுஞ்செய்திகள் மூலம் போலியாக நடத்தப்படும் சைபர் மோசடி ஆகும். இத்தகைய மோசடிகள் குறித்து புகார் அளிக்க 1930 அல்லது www.cybercrime.gov.in அணுகலாம்.

Similar News

News November 12, 2025

திண்டுக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

image

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் முகவர் கூட்டம்.
திண்டுக்கல் மாநகராட்சி: “முதல்வர் படைப்பகம்” பூமி பூஜை.
நத்தம்: கைலாசநாதர் கோவிலில் கால பைரவர் பூஜை.
நத்தம்: ரெட்டியபட்டியில் வாக்காளர் பட்டியல் பயிற்சி.
நத்தம்: பால் வேன் ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு.
சிறுமலை: புதிய சாலை பூமி பூஜை, தார் சாலை பணிக்கு அமைச்சர் எம்.எல்.ஏக்கு நன்றி தெரிவிப்பு.

News November 12, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவம்பர் 12) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

திண்டுக்கல்லில் இருவர் மீது குண்டர் சட்டம்!

image

திண்டுக்கல், நல்லாம்பட்டி சாலையில் மினி பஸ்ஸை வழிமறித்து பணப்பை, செல்போன் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (31) மற்றும் ராசு (25) இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். அதையடுத்து, தாலுகா காவல்துறையினர் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!