News September 18, 2024
திண்டுக்கல் புது டிஐஜி எப்போது வருவார்?

தமிழக காவல்துறையில் 2 மாவட்டங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் டிஐஜிக்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இந்தப் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ராமநாதபுரம் டிஐஜியான அபிநவ் குமார் கூடுதலாக திண்டுக்கல் சரகத்தை கவனிக்கிறார். இதனால் மக்கள், போலீசார் ராமநாதபுரம் சென்று பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
Similar News
News August 12, 2025
மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி அரிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வது புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழக இலக்கிய களம் நடத்தும் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. புகைப்படத்தின்(Soft Copy) மென் நகலை dikbookfair2025@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படங்களை ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.
News August 11, 2025
கீரனூர் அருகே கொலை சிறுமி உட்பட மூன்று பேர் கைது!

பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த சிறுமி, 19 வயது இளம்பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரை கீரனூர் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.