News November 2, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (நவ .01) இரவு 9 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பாரி சங்கர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News November 2, 2025
தருமபுரி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள ஜோதி திருமண மண்டபத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா நம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா பந்தலில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
News November 2, 2025
தருமபுரி: டூவீலர் மோதி விவசாயி பலி!

காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி, வாக்கன்கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே முனுசாமி என்பவர் வசிக்கிறார். விவசாயி. நேற்று (நவ.1) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், தர்மபுரி ஜி.ஹெச்-ல் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இது குறித்த காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


